19/May/2022 08:36:38
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள பரவாக்கோட்டையில், கூட்டுப்பண்ணைய திட்ட தொகுப்பு நிதியின்கீழ், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை, சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினார்.
விழாவில், விவிசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கி மேலும் அவர் பேசியது:
விவசாயிகள்
பயன் பெற்று
வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த
தமிழக அரசால் கூட்டுப்பண்ணைய திட்டம்
செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும்
1000 விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின்கீழ்,
குறைந்தப்பட்சம் 20 விவசாயிகளை கொண்டு 5 விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு,
குழுக்களின் உறுப்பினர்களான 100 விவசாயிகளைக்கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழு
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுக்களுக்கு வேளாண் கருவிகள் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ளும் வகையில் ரூ.5
லட்சம் வரையிலும் தோட்டக்கலைத்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
அதன்படி தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், பரவாக்கோட்டை மற்றும் எட்டியத்தளி உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்த 200 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.1 லட்சம் மானிய உதவித்தொகையுடன் கூடிய ரூ.11.36 லட்சம் மதிப்பிலான 2 பவர்டில்லர்கள், ஒரு பவர்வீடர், 5 ரொட்டவேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வேளாண் உபகரணங்கள், கடனுதவிகளை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி மெய்யநாதன் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் சிட்டங்காடு, பட்டத்தூரணி படித்துறை கட்டுமானப் பணியினை பூமி பூஜையுடன் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.