27/May/2022 08:41:13
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 62 பேர் காயமடைந்தனர்.
வாராப்பூர் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்ளைச் சேர்ந்த 853 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.300 மாடுபி்டி வீரர்கள் கலந்து கொண்டு வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றனர்.
அப்போது, காளைகள் முட்டியதில் மாடுபிடிவீரர்கள், பார்வையாளர்கள் உள்பட
62 பேர் காயமடைந்தனர்.அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர்
சிகிச்சை அளித்தனர்.அதில், பலத்த காயமடைந்த 6 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.செம்பட்டிவிடுதி
போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். போட்டியை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.